Type Here to Get Search Results !

இஸ்ரவேல் வரலாறு(History of Israel)


.       இஸ்ரவேல் வரலாறு

 

இஸ்ரவேல் - அறிமுகம்: 

கானான்:- 

தற்போதைய இஸ்ரவேல் முன்பு கானான் என்று அழைக்கப்பட்டது. அங்கே கானானிய மக்கள் குடியிருந்தனர். பிற்காலத்தில் ஆபிரகாம் எனும் மனிதன் ஊர் (தற்காலத்து ஈராக்) எனும் பட்டணத்திலிருந்து வந்து அங்கே குடியேறினான். அவன் மூலமாக இஸ்ரவேல் சந்ததி உருவாகியது. 

ஆபிரகாமுக்கு வாக்கு பண்ணிய தேசத்தை, யோசுவாவினுடைய காலத்தில் தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்தார். அதன் பின்பு நியாயாதிபதிகளின் காலம். 

கடைசி நியாயாதிபதியும், தீர்க்கதரிசியுமான சாமுவேலிடம் ஜனங்கள்  தங்களுக்கு ஒரு இராஜா வேண்டுமென்று முறையிட, தேவனாகிய கர்த்தர் சவுலை கி. மு 1050 அளவில் சமஸ்த இஸ்ரவேலுக்கும் இராஜாவாக அபிஷேகித்தார். பின்பு தாவீது, அவன் மகன் சாலமோன் சமஸ்த இஸ்ரவேலையும் அரசாட்சி செய்தார்கள். 

சாலமோனுடைய மகனுடைய காலத்தில் இஸ்ரவேல் இரண்டாக பிளவுபட்டு யூதா என்றும், இஸ்ரவேல் என்றும் இரு நாடுகளாக மாறியது. யூதாவின் கடைசி இராஜா செதேக்கியா. அரசாட்சி வருடம் கி.மு 597 . சாலமோன் இராஜாவினால் கட்டப்பட்ட தேவாலயம் பாபிலோனியரினால் கி.மு 586 அளவில் முற்றிலும் அழிக்கப்பட்டது. 

536 - 142 கி.மு மேதிய, பெர்சிய காலம் 

538 - 515 அனேக யூதர்கள் பாபிலோனிலிருந்து திரும்பி வந்து ஆலயத்தை மறுபடியும் புதுப்பித்து கட்டினார்கள். கி.மு 332 அளவில் மகா அலக்ஸாந்தர் இஸ்ரவேலை பிடித்தார். 

கி.மு 166 - 160 மெக்காபியர்களின் கிளர்ச்சி. 

கி.மு 63 ஆம் ஆண்டு ரோம தளபதி பொம்பேயினால் இஸ்ரவேல் பிடிக்கப்பட்டது.. 

63 - 313 கி. பி வரை ரோம சாம்ராஜ்ய காலம் 

ஏரோதினால் இரண்டாவது தேவாலயம் கட்டப்பட்டது. கி. பி 70 தீத்து இராஜாவினால் முற்றிலும் அழிக்கப்பட்டது. 

313 - 636 கொன்ஸ்டன்டெய்ன் ஆட்சி 

636 - 1099 அராபியர்களின் ஆட்சி ( பள்ளி வாசல் கட்டப்பட்டது Dom) 

1099 - 1291 லத்தீன் ஆட்சிக்குட்டது 

1291 - 1516 மம்லக் ஆட்சி 

1517 - 1917 இஸ்ரவேல் ஒட்டோமான் ஆட்சிகுட்பட்டது ( துருக்கி ) ஒஸ்மான் மன்னரால் ஆரம்பிக்கப்பட்ட இராச்சியம், ஆதலால் ஒஸ்மான் இராஜ்யம் என்றும் அழைப்பர். 

2600 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரவேல் பல்வேறு சாம்ராச்சியங்களுக்கு கீழ்ப்பட்டிருந்தமையால், இஸ்ரவேல் எனும் தேசம் வரைபடத்தில் கூட காணப்படவில்லை. 

இஸ்ரவேலிலே சொற்ப யூதர்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர்.வெளி தேசங்களில் அகதிகாளாக வாழ்ந்து வந்த யூதர்களின் எண்ணிக்கை அவர்களை விட எத்தனையோ மடங்கு அதிகமாயிருந்தது.

சீயோன் மகாநாடு:- 

முதலாவது சீயோன் மகாநாடு கி.பி 1897 

ஏறக்குறைய 2000 ஆண்டுகளாக இஸ்ரவேல் மக்கள் நாடுகளற்று, அந்நிய தேசங்களிலே அகதிகளாக, அடிமைகளாக பல உரிமைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையிலே வாழ்ந்து வந்தார்கள். இப்படி எங்கு சென்றாலும் புறக்கணிக்கப்பட்டும், இகழப்பட்டும், உரிமைகள் பறிக்கப்பட்டும், துரத்தப்பட்டும் இருந்தபடியால், அவர்களுக்கென்று சொந்த நாடு தேவைப்பட்டது. 

ந்நிலையில் 1847 ஆம் ஆணடு;, ஆவணி மாதம் 29 ஆம் திகதி சுவிற்ஸர்லாந்து தேசத்திலுள்ள பாசல் மாநாகரில்Theoder Herzleதலமையில் முதலாவது சீயோன் மகாநாடு நடைபெற்றது. அதிலே 17 நாடுகளிலிருந்து வந்த 204 யூதர்கள் அங்கத்தினராக கலந்து கெண்டனர். 

மகாநாட்டின் முக்கிய நோக்கம் இஸ்ரவேல் எனும் தேசத்தை உருவாக்குவது 

Theoder Herzle -Diary யிலிருந்து பாசலில் நடந்த மகாநாடைப்பற்றி வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் : 

பாசலிலே நான் ஒரு யூத நாட்டை ஸ்தாபித்தேன் 

மகாநாடு நடைபெற்ற இடம்Switzerland , Basel 

மகா நாட்டின் சின்னம் (தாவீதின் சின்னம்)

 

முதலாவது உலகப்போர்:- 

 

முதலாம் உலகப்போரின் இறுதி கட்டத்தில் இங்கிலாந்து இராணுவம் துருக்கியர்களிடமிருந்து இஸ்ரவேலை கைப்பற்றியது. கைப்பற்றியது என்று சொல்வதை விட மீட்டெடுத்தது என்று சொன்னால் அது மிகையாகாது. ஜெனரல்Sir Edmund Allenbyஅந்த போருக்கு தலமை தாங்கினார்.1917 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் காசா பட்டணத்தையும் , மார்கழி மாதம் எருசலேமையும் துருக்கியர்களின் 400 வருட ஆட்சியை முறியடித்து, கைப்பற்றினார். 

 

எருசலேமில் பிரவேசித்தல் Sir Edmund Allenby 

முதலாவது உலகப்போர் சமயத்தில் பிரித்தானியர்களின் வாஞ்சை இஸ்ரவேல் எனும் தேசத்தை பலஸ்தீனத்தில் உருவாக்குவதாக இருந்தது. யூதர்களின் நாட்டை திரும்ப அவர்களுக்கு கொடுப்பது. இங்கிலாந்தின் வெளிநாட்டு அமைச்சர்Arthur James Bulfourஇதில் முக்கிய பங்கு வகித்தார். 

Arthur James Bulfourஅவர்கள் எழுதிய கடிதம் 

Foreign Office 2nd November 1917 

Dear Lord Rothschild: I have much pleasure in conveying to you on behalf of His Majesty's Government the following declaration of our sympathy with Jewish Zionist aspirations which has been submitted to, and approved by, the Cabinet. "His Majesty's Government view with favour the establishment in Palestine of a National Home for the Jewish people, and will use their best endeavours to facilitate the achievement of this object, it being clearly understood that nothing shall be done which may prejudice the civil and religious rights of existing non-Jewish communities in Palestine, or the rights and political status enjoyed by Jews in any other country." I should be grateful if you would bring this declaration to the knowledge of the Zionist Federation. 

Yours sincerely 

Arthur James Balfour SIREDMUND ALLENBY

 

இரண்டாவது உலக மகாயுத்தம்:- 

இரண்டாவது உலக மகாயுத்தம் 1939 - 1945 

60 மில்லியன் மக்கள் இந்தப்போரிலே உயிரிழந்தனர். இராணுவ வீரர்களை விட பொது மக்களே அதிகம். 

எப்படி தொடங்கியது: 

இரண்டாம் உலகப்போருக்கு பிரதானகாரணம் ஹிட்லர். ஜேர்மனி சில ஐரோப்பா 

நாடுகளை கைப்பற்றியது. இதனை பிரான்ஸ், இங்கிலாந்து தேசங்கள் கண்டித்தன. 

ஜேர்மனி போலந்து நாட்டை கைப்பற்ற இருந்த சமயத்தில் இங்கிலாந்தும், பிரான்சும் கைப்பற்ற வேண்டாம் என்று தடுத்தது. கைப்பற்றினால் தாங்கள் போர் தொடுப்போம் என்றும் சொல்லியிருந்தார்கள் ஆனால் ஹிட்லர் கேட்கவில்லை. போலந்து மேல் படையெடுத்தார். இங்கிலாந்தும், பிரான்சும் ஜேர்மனி மேல் படையெடுத்தது. 

எப்படி முடிவடைந்தது: 

1941 ஆம் ஆண்டு ஜப்பான் அமெரிக்காவை தாக்கியதால், அமெரிக்கா ஜப்பான் மீதும் ஜேர்மனி மீதும் போர் அறிவிப்பு செய்தது. மில்லியன் கணக்கில் ஜனங்கள் செத்ததால் அமெரிக்கா போரை நிறுத்த முடிவு செய்தது. ஆனால் ஜேர்மனி தொடர்ந்து தாக்கியது. வைகாசி 1945 ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதால் ஜேர்மனி சரணடைந்தது. அமெரிக்க இராணுவம் 2 அணுகுண்டு ஜப்பான் மீது போட்டதன் மூலம் ஜப்பானும் சரணடைந்தது. 2 ஆவது உலகப்போர் முடிவடைவதற்கு இந்த இரண்டுமே காரணம். 

1945 ஹரரோஷிமா, நாகசாகி: 

6 மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டனர். இதிலே 1.5 மில்லியன் குழந்தைகளும் அடங்குவர். 

(கீழே a என்பது "நாடு", b என்பது "உயிர்சேதம்", c என்பது "ஜனத்தொகையில் உயிரிழந்த சதவீதம்", d என்பது "இரானுவத்தில் உயிர் சேதம்", e என்பது "பொது மக்களில் உயிர்சேதம்" 

 

a. நாடுகள்: 

b. உயிர்ச்சேதம்: 

c. ஜனத்தொகையில் 

d. இராணுவத்தில் 

e. பொதுமக்கள் 

 

a. ரஷ்யா 

b. 20,600,000 

c. 10.4% 

d. 13,600,000 

e. 7,000,000 

 

a. சீனா 

b. 10,000,000 

c. 2.0% 

a. ஜேர்மனி 

b. 6,850,000 

c. 9.5% 

d. 3,250,000 

e. 3,600,000 

 

a. போலந்து 

b. 6,123,000 

c. 17.2% 

d. 123,000 

e. 6,000,000 

 

a. ஜப்பான் 

b. 2,000,000 

c. 2.7% 

 

a. யூகோஸ்லாவியா 

b. 1,706,000 

c. 10.9% 

 

a. பிரான்ஸ் 

b. 810,000 

c. 1.9% 

d. 340,000 

e. 470,000 

 

a. கிரேக்கம் 

b. 520,000 

c. 7.2% 

 

a. அமெரிக்கா 

b. 500,000 

c. 0.4% 

d. 500,000 

 

a. அவுஸ்திரியோ 

b. 480,000 

c. 7.2% 

 

a. ருமேனியா 

b. 460,000 

c. 3.4% 

 

a. ஹங்கேரி 

b. 420,000 

c. 3.0% 

 

a. இத்தாலி 

b. 410,000 

c. 0.9% 

d. 330,000 

e. 80,000 

 

a. செக்கோஸ்வேக்காய் 

b. 400,000 

c. 2.7% 

 

a. இங்கிலாந்து 

b. 388,000 

c. 0.8% 

d. 326,000 

e. 62,000 

 

a. நெதர்லாந்து 

b. 210,000 

c. 2.4% 

d. 198,000 

e. 12,000 

 

a. பெல்கியம் 

b. 88,000 

c. 1.1% 

d. 76,000 

e. 12,000 

 

a. பின்லாந்து 

b. 84,000 

c. 2.2% 

 

a. அவுஸ்திரேலியா 

b. 39,000 

c. 0.3% 

 

a. கனாடா 

b. 34,000 

c. 0.3% 

 

a. அல்பானியா 

b. 28,000 

c. 2.5% 

 

a. இந்தியா 

b. 24,000 

c. 0.01% 

 

a. நோர்வே 

b. 10,262 

c. 0.3% 

 

a. நியூசிலாந்து 

b. 10,000 

c. 0.6% 

 

a. லக்சம்பேர்க் 

b. 5,000 

c. 1.7% 

 

TOTAL = 52,199,262 

 

யூதர்களுக்கொதிரான ஹிட்லரின் சட்டங்கள்: 

1933 ஆண்டு சில NAZI இராணுவம் யூதர்களின் கடைகளுக்கு முன்னால் நின்று யூதர்களிடம் சாமான்கள் வாங்க வேண்டாம் என்று கலாட்டா செய்தது. அதன் பின்பு யூதர்களின் கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டது. பல யூதர்கள் வேலை ‌வாய்ப்புகளை இழந்தனர். யூதர்களுக்கெதிராக 430 சட்டங்களை ஹிட்லர் கொண்டு வந்தான். 

அவற்றில் சில: 

முதலாவது சட்டம் : 

ஆடி.4.1933 

யூதர்கள் தங்களது அரசாங்க உத்தியோகங்களிலிருந்து நீக்கம் . 

( வைத்தியர்கள், ஆசிரியர்கள், சட்ட சிபுணர்கள் . . . . ) 

சட்டம் 195: 

யூதர்கள் வாகனம் ஓட்டுவது தடைசெய்யப்பட்டது. (அவர்களுடைய ஓட்டுனர் அனுமதிச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது) 

சட்டம் 242: 

யூதர்களின் கல்வி ஜேர்மன் பாடசாலைகளில் தடைசெய்யப்பட்டது. எந்தவொரு அரசாங்க பாடசாலைகளிலுமோ, தனியார் கல்வி நிறுவனங்களிலிமோ கற்க தடை. யூதர்கள் தங்களுக்கென்ற சிறுவர் பாடசாலைகளை மறைமுகமாக நிறுவினார்கள். 

சட்டம் 329: 

யூதர்கள் தங்களது சட்டையிலே மஞ்சள் அடையாளக்குறியீடு போட வேண்டும். இப்படி பல சட்டங்கள் யூதர்களுக்கெதிரா வந்தது. கடைசியாக மில்லியன் கணக்கில் யூதர்கள் அகதி முகாம்களில் வைத்து கொலை செய்யப்பட்டனர். 

இந்த கால கட்டத்தில் ஷின்ட்லர் என்பவர் 1200 யூதர்களை காப்பாற்றினார். அந்த சம்பவத்தை ஸ்டீவன் ஷ்பீல்பேர்க் ஷின்டலர் லிஸ்ட் என்று படமாக்கினார். 7 ஒஸ்கார் விருதுகளை படம் பெற்றது.

சுதந்திர தினம்: 

சுதந்திர தினம்14.5.1948 

14.5.1948அன்றுDavid Ben-Gurion(இஸ்ரவேலின் முதலாவது பிரமமந்திரி) சுதந்திர நாடாக இஸ்ரவேலை அறிவித்தார். சுதந்திரதினத்தை அறிவித்து 24 மணித்தியாலங்களுக்கு பின்பு அவர்களுடைய அண்டை நாடுகளான அரபியர்கள் இஸ்ரவேல் மேல் போர் தொடுத்தனர். இஸ்ரவேல் அந்த யுத்தத்தை வென்றாலும் அநேக உயிரிழப்புகள் நேரிட்டது. 

இஸ்ரவேலின் முதல் அரசாங்கம் (கையொப்பமிட்ட தலைவர்கள்) 

Daniel Auster 

Mordekhai Bentov 

Yitzchak Ben Zvi 

Eliyahu Berligne 

Fritz Bernstein 

Rabbi Wolf Gold 

Meir Grabovsky 

Yitzchak Gruenbaum 

Dr. Abraham Granovsky 

Eliyahu Dobkin 

Meir Wilner-Kovner 

Zerach Wahrhaftig 

Herzl Vardi 

Rachel Cohen 

Rabbi Kalman Kahana 

Saadia Kobashi 

Rabbi Yitzchak Meir Levin 

Meir David Loewenstein 

Zvi Luria 

Golda Myerson 

Nachum Nir 

Zvi Segal 

Rabbi Yehuda Leib 

Hacohen Fishman 

David Zvi Pinkas 

Aharon Zisling 

Moshe Kolodny 

Eliezer Kaplan 

Abraham Katznelson 

Felix Rosenblueth 

David Remez 

Berl Repetur 

Mordekhai Shattner 

Ben Zion Sternberg 

Bekhor Shitreet 

Moshe Shapira 

Moshe Shertok

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.