"அவள் அதை (குழந்தையை) அப்புறம் ஒளித்துவைக்கக்கூடாமல், ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள்." (யாத் 2:3)
"நாணல்" என்பது ஆற்றங்கரையோரம் வளரும் ஒருவித கோரைப் புல்.. இது காயும்போது சற்று கடினத்தன்மை கொள்ளும்.
மோசே எனும் கர்த்தரின் தீர்க்கதரிசி, குழந்தையாக இருக்குப்போது காப்பாற்றப்பட, அவரது தாய் அந்த நாணற்புல்லினால், ஒரு பெட்டி ஒன்றைச் செய்து, அதற்கு பிசின் மற்றும் கீல் (தார் போன்ற பூச்சு) பூசி, குழந்தையை அதில் வைத்து, நைல் நதியில் அனுப்ப, அதை பார்வோனின் குமாரத்தி எடுத்து, அரண்மனையிலேயே வளர்த்தியது வரலாறு..
நாணல்:
இது ஆற்றங்கரையில் வளர்ந்தாலும் தண்ணீரில் ஒட்டாது.
இதனால் செய்யப்பட்ட பெட்டியானது.. தமது பிள்ளைகளைக் காக்கும் கிறிஸ்து இயேசுவை அடையாளப்படுத்துகிறது. எப்படி?
தண்ணீரால் நனையாத நிலை, உலகத்தால் கறைபடாத தூய வாழ்வு.
நாணல் ஒரு தாழ்மையின் அடையாளம்.
அப்பெட்டி, ஒரு பாதுகாப்பான உறைவிடம்.
அதனடியில் பூசப்பட்ட பிசின் / கீல், தண்ணீர் அடிப்பக்கமாக வராமல் காக்கும். நீரில் (உலக பாவங்களில்) மூழ்காமல் காக்கும்.
அப்பெட்டி, நீரில் பயணித்து, மோசே செல்லவேண்டிய இடத்துக்கு கூட்டிச்சென்றது. சேரவேண்டிய மனிதரிடம் சேர்த்தது. கிறிஸ்துவும் அப்படியே ஒரு மனிதனை தம்முள் வைத்து நடத்தி, சேரவேண்டிய இடமாகிய பரலோகம் கொண்டு சேர்க்கிறார்.
பிற்காலத்தில் பாப்பரைஸ் என்ற நாணல் வகைப் புற்களைக்கொண்டே, தேவவார்த்தைகள் எழுதப்பட்டன. கிறிஸ்துவின் பெயர் "தேவனுடைய வார்த்தை" அல்லவா?
"நாணல்" என்பது ஆற்றங்கரையோரம் வளரும் ஒருவித கோரைப் புல்.. இது காயும்போது சற்று கடினத்தன்மை கொள்ளும்.
மோசே எனும் கர்த்தரின் தீர்க்கதரிசி, குழந்தையாக இருக்குப்போது காப்பாற்றப்பட, அவரது தாய் அந்த நாணற்புல்லினால், ஒரு பெட்டி ஒன்றைச் செய்து, அதற்கு பிசின் மற்றும் கீல் (தார் போன்ற பூச்சு) பூசி, குழந்தையை அதில் வைத்து, நைல் நதியில் அனுப்ப, அதை பார்வோனின் குமாரத்தி எடுத்து, அரண்மனையிலேயே வளர்த்தியது வரலாறு..
நாணல்:
இது ஆற்றங்கரையில் வளர்ந்தாலும் தண்ணீரில் ஒட்டாது.
இதனால் செய்யப்பட்ட பெட்டியானது.. தமது பிள்ளைகளைக் காக்கும் கிறிஸ்து இயேசுவை அடையாளப்படுத்துகிறது. எப்படி?
தண்ணீரால் நனையாத நிலை, உலகத்தால் கறைபடாத தூய வாழ்வு.
நாணல் ஒரு தாழ்மையின் அடையாளம்.
அப்பெட்டி, ஒரு பாதுகாப்பான உறைவிடம்.
அதனடியில் பூசப்பட்ட பிசின் / கீல், தண்ணீர் அடிப்பக்கமாக வராமல் காக்கும். நீரில் (உலக பாவங்களில்) மூழ்காமல் காக்கும்.
அப்பெட்டி, நீரில் பயணித்து, மோசே செல்லவேண்டிய இடத்துக்கு கூட்டிச்சென்றது. சேரவேண்டிய மனிதரிடம் சேர்த்தது. கிறிஸ்துவும் அப்படியே ஒரு மனிதனை தம்முள் வைத்து நடத்தி, சேரவேண்டிய இடமாகிய பரலோகம் கொண்டு சேர்க்கிறார்.
பிற்காலத்தில் பாப்பரைஸ் என்ற நாணல் வகைப் புற்களைக்கொண்டே, தேவவார்த்தைகள் எழுதப்பட்டன. கிறிஸ்துவின் பெயர் "தேவனுடைய வார்த்தை" அல்லவா?
Thank you so much for Visiting our Blog