"இயேசு" என்றால்..
"இயேசு" என்ற தன்னிகரற்ற பெயரின் மூலம் எபிரேய மொழிப்பெயரான יהושוע (யெஷுஹா). இது வேதாகமத்தில் முதலாவதாக யாத்திராகம் 17:9 இல் காணப்படுகிறது. "யோசுவா" - மோசேக்கு அடுத்ததாக இஸ்ரவேல் மக்களின் தலைவரின் பெயராகும். இப்பெயர் கர்த்தரின் பெயரும் அவரது செயலும் உள்ளடக்கப்பட்ட பெயர் வடிவம். இயேசு என்றால் மீட்பவர்..
யூத மக்கள் பாபிலோனில் அடிமைகளாக இருந்தபோது அவர்களது தாய்மொழி எபிரேய மொழியிலிருந்து அரமைக் மொழிக்கு மாற்றம் பெற்றது. இதுவே கிறிஸ்து இயேசுவின் தாய்மொழி. יהושוע (யெஷுஹா)என்ற பெயரும், ישוע (இயேஷுஹா)என மறுவிற்று. "அவர் காப்பார்" என பொருள்பட்டது. இது மத்தேயு நற்செய்தியில் "அவர்களை இரட்சிப்பார்; (காப்பார்) அதனால் இயேசு என்று பெயரிடு" என்று மரியாளுக்கு கூறியதை ஆமோதிக்கிறது.
பிற்காலத்தில் புதிய ஏற்பாடு ஒன்றிணைக்கப் பட்டப்போது, ישוע (இயேஷுஹா) எனும் பெயர் கொய்னே கிரேக்க மொழி எழுத்துப்பெயர்ப்பின் போது "இயேசுஸ்" என மாற்றப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் தமிழர் பகுதிகளுக்கு முதலில் கிறிஸ்தவம் பரப்பப்பட்ட போது இயேசுஸ் என்ற பெயரே போர்த்துக்கீசியரால் பயன்படுத்தப்பட்டது. பின்னர் "ஸ்" என்ற வடமொழி எழுத்து தவிர்ப்பதற்க்காக இயேசு என்று பயன்படுத்தப்பட்டது. இயேசு என்றால் மீட்பவர்..
"கிறிஸ்து" என்றால்..
கிறிஸ்து என்பது ஒரு பெயர் அல்ல மாறாக அது ஒரு பட்டமாகும். இது கிரேக்க மொழியில் அபிஷேகிக்கப்பட்டவர் / ஆசிர்வதிக்கப்பட்டவர் என பொருளுள்ள "கிறிஸ்தோஸ்" என்பதிலிருந்து தமிழுக்கு மறுவியதாகும். இது மேசியா என்ற தமிழ் பதத்தின் மூலமாகும். மேசியா என்பது தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்ட தீர்கதரிசி, அரசரன், அல்லது பிரதான ஆசாரியனைக் (தலைமைக் குரு) குறிக்கும்.
தேவன் என்பது..
கிரேக்க புதிய ஏற்பாட்டின் பல இடங்களில் இயேசு தியெஸ் (Θεός) என குறிப்பிடப்பட்டுள்ளார். இது கொன்யே கிரேக்க மொழியில் இறைமையை குறிக்கும் சொல்லாகும். ஜேம்ஸ் மன்னனின் தமிழ் விவிலியம் இதனை "தேவன்" என மொழிப்பெயர்க்கிறது.
தீர்க்கதரிசி என்பது..
புதிய ஏற்பாட்டின் படி பல யூதர் இயேசுவை ஒரு தீர்க்கதரிசி என நினைத்தனர். புதிய ஏற்பாட்டில் இயேசு தன்னை ஒரு தீர்க்கதரிசி என குறிப்பிட்ட இடங்களும் உண்டு. பழைய ஏற்பாட்டில் கடவுளின் வார்த்தைகளையும், எதிர்காலத்தில் நடைப்பெறப்போகிறவற்றையும் மக்களுக்கு எடுத்து கூறியவர்களே தீர்க்கதரிசிகள் எனப்பட்டனர். மோசேயின் தீர்க்கதரிசனம் - தன்னைவிட ஒரு பெரிய தீர்க்கதரியை எழும்பப்பண்ணுவார் என்பது நிறைவேறிற்று.
ஆண்டவர் என்பது..
நற்செய்திகளும் அப்போஸ்தலர் புத்தகமும் இயேவை ஆண்டவர் என பல இடங்களில் குறிப்பிடுகின்றன். யோவான் நற்செய்தியில் உள்ளபடி இயேசு தான் ஆண்டவர் என ஏற்றுக்கொண்டார். இது கர்த்தராகிய இயேசுவின் இறைத்தன்மைக்கு சான்றாக விளங்குகிறது. ஒரு வசனத்தில் இயேசு என் ஆண்டவரே என் தேவனே என அழைக்கப்படுகிறார். இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறிக்க பயன்படுதப்படும் பழைய ஏற்பாடு வசனம் சங்கீதம் 110:1 ஆகும். இங்கு ஆண்டவர் என்பது மெசியாவை குறிக்க பயன்படுத்தப்படுகிறது அப் 2:34,35.
மனுஷகுமாரன் என்பது..
இயேசு மிகச்சில சந்தர்ப்பங்களில் மட்டுமே மனித குமாரன் என அழைக்கப்பட்டார்.(அறமைக்:בר נשא பர் நஷா) முதல் மூன்று நற்செய்திகளில் இயேசு பேசும் போது தன்னைக் குறிக்க பயன்படுத்தினார். இது அக்காலத்தில் வழக்கிலிருந்த ஒரு பழமொழி என்பது ஆய்வாளர் கருத்தாகும். முழுமனிதனாக இயேசு வந்தார் என்பது இதன்வழி மெய்யாயிற்று.
Thank you so much for Visiting our Blog