Type Here to Get Search Results !

இன்றைய மன்னா

                                               

                  இன்றைய மன்னா

 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.!

                    கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான எனதருமை சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துக்கள் ஸ்தோத்திரங்களை தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

                     எனக்கு பிரியமானவர்களே இந்த நாளிலும் கூட இயேசு கிறிஸ்துவின் அன்பின் மகத்துவத்தை நாம் அறிந்து கொள்ளப் போகிறோம்.        

                       ஒரு தேசத்தில் ஒரு குக்கிராமத்தில் ஆடுகள் மேய்க்கும் ஒரு வாலிபன்  இருந்தான்.தன் ஊருக்கு வெளிப்புறத்தில் தன் ஆடுகளை மேய்த்துக் கொண்டு வந்த அந்த வாலிபன் ஒருநாள் மழை காலத்தில் தன் ஆடுகளை தன் ஊரின் வெளிப்புறத்தில் உள்ள ஒரு பெரிய குளத்தின் அருகே  மேய்த்துக் கொண்டு வந்தான்.

        அந்தக் குளம் மழை நீரினால் நிறைந்து உடைப்பு ஏற்படக்கூடிய சூழல் உருவாயிற்று.தண்ணீர் சிறிதான உடைப்பில் கசைவு ஏற்பட்ட பொழுது அந்த வழியாய் வருவோர் போவோர் யாவரும் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் போய்விட்டார்கள்.ஆனால் இந்த வாலிபன் அந்த நீரை கண்டபோது அதை அடைக்க வேண்டும் என்கிற முயற்சியினால் அங்க கிடக்கும் கற்கள, புல் பூண்டுகள் இவைகளை வைத்து அடைக்க முயற்சி செய்தார்.ஆனால் அது அவனுக்கு கை கொடுக்கவில்லை கூடுதலாக உடைப்பு பெரிதாக மாறியது.

            ஊருக்குள் போய் சொல்லி ஆட்களை அழைத்துக் கொண்டு வர விரும்பினாலும் தனக்கு முன்னதாக இந்த குளத்தின் நீர் ஊருக்குள் போய்விடும் .அப்படி ஊருக்கு போனாள் ஒட்டுமொத்த ஊரும் இந்த நீரினால் அழிந்து போய்விடும்.ஆகவே என்ன செய்யலாம் என்று யோசித்த அந்த வாலிபன்,சற்றும் எதையும் எதிர்பாராமல் தன் கை கால்கள் பின் இடுப்பு பகுதி வைத்து அடைத்து பார்த்த அப்பொழுதும் தண்ணீரில் வறுத்து நிற்கவில்லை.    

            கடைசியாக அந்த ஓட்டைக்குள் தன் தலையை முழுவதுமாக நுழைத்து அந்த தண்ணீரை அடைத்து ஊரை அழிவிலிருந்து மீட்டெடுத்தார் அந்த வாலிபன்.அவனுக்கு கிடைத்த விலை மதிப்பு அவன் ஜீவன் அவனை விட்டுப் பிரிந்தது.

                        எனக்கு பிரியமானவர்களே..ரோமருக்கு எழுதின நிருபம்  ரோமர்5;8 இந்த வேத பகுதியில்" நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்ப என்பதாக எழுதப்பட்டிருக்கிறது "

          ஆம் பிரியமானவர்களே..ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பு ஒரு மனிதனின் மதத்தை மாற்றுவதற்கு வந்தது அல்ல மாறாக.ஒரு மனிதனுடைய பாவத்தைப் போக்குவதற்காக வந்தது.

                ஆதீனத்தில் இருந்து தேவன் மனிதனின் பாவத்தை போக்க தன்னுடைய மனிதர்களாகிய தீர்க்கதரிசிகளை தன் வேதவாக்கியங்களை அந்த மக்களுக்கு கொடுக்க ஆரம்பித்தார்.இவைகளை படித்து பார்த்து காதால் கேட்டு இந்த மக்கள் உணர்ந்து திருந்தி விடுவார்கள்,மனம் மாறி விடுவார்கள் என்று தேவன் நினைத்தார்.ஆனால் இருக்க இருக்க பாவத்தின் வலிமையானது கூடிக்கொண்டே போனது ஒழிய குறைந்துவிடவில்லை.அந்த வாலிபன் அந்த உடைப்பை அடைக்க கற்கள் புல்பூண்டு பயன்படுத்தியது போல தேவனும் சில உபகரணங்களை மனிதனை மாற்ற பயன்படுத்தினார்.ஆனால் மாற்றம் ஏற்படவில்லை. அந்த கடைசியாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாகப் பிறந்து எல்லாம் மனிதர்களோடு கூட வாழ்ந்து இந்த மனிதருடைய பாவத்தை உணர்வு செய்து பாவத்தின் மன்னிப்பை அவர்களுக்கு கொடுத்து அந்த பாவத்திற்காக தன்னையே தேவன் பலியாகக் கொடுத்தார.

             ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் அன்பிற்கு இந்த உலகத்தில் ஈடு இணை இல்லை என்று சொல்வதற்கு காரணம் என்னவென்று சொன்னால் நம்முடைய பாவத்திற்காக இதுவரை தன்னை பலியாக ஒப்புக் கொடுத்தவர்கள் ஒருவரும் இல்லை.

  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னை ஜீவ பலியாக நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுத்து இருக்கிறார் .அவருடைய அன்பு மாறாதது,அவருடைய இரக்கம் மாறாதது அவருடைய கிருபை மாறாது ஆகவே உங்கள் வாழ்க்கையில் இந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு இடம் கொடுங்கள்.

       ஆண்டவராகிய தேவன் தாமே உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்.!! 

                                       ஆமென்.!ஆமென்.!!ஆமென்.!!!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.